விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகர செய்தி

விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகர செய்தி

03 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் அல்லது TSP உரம் ஏற்றிச் வந்த MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பல் ஊடாக 36,000 மெட்ரிக்டொன் மண் உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதேபோன்ற மற்றொரு கப்பல் எதிர்காலத்தில் வரவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மண் உரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்கள் 2022/23 பெரும் போகத்தில் நெற்செய்கை செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மண் உரத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயத் துறை பரிந்துரைப்படி, ஒரு ஹெக்டேருக்கு 55 கிலோ மண் உரம் இலவசமாக வழங்கப்படும்.