ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் 2024 ஒலிம்பிகிக் (Olympics 2024 - Paris) குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக கால்பந்து, கை பந்து, ரக்பி ஆகிய ஆட்டங்கள்  நிறைவு பெற்றுள்ளன.

மொத்தமாக சர்வதேச அளவில் 10,214ற்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களின் அணியின் வெற்றிக்காக காத்திருக்கின்றன. 

நேற்று நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் கனடா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட நிலையில், கனடா 2 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி அடைந்தது. 

அதேபோல, குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், ஸ்பெயின் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

குரூப் பி பிரிவில் அமெரிக்கா - சிம்பாவே அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அமெரிக்கா மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி | Paris Olympicsகுரூப் ஏ பிரிவில் பிரான்ஸ் - கொலம்பியா அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பிரான்ஸ் அணி மூன்று கோள்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி | Paris Olympicsபெண்களுக்கான கை பந்து (Handball) பிரிவில் குரூப் ஏ-வில் ஸ்வீடன் - நோர்வே அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், ஸ்வீடன் அணி 32 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

ரக்பி (Rugby Sevens) ஆட்டத்தில் ஜப்பான் - உருகுவே, சோமா - கென்யா ஆகிய நாடுகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.