உடலில் விஷம் கலப்பதால் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் 1000 பேர்!
இலங்கையில் (Sri Lanka) உடலில் விஷம் கலப்பதனால் வருடத்திற்கு சுமார் 1000 பேர்வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department of Government Information) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவவேளை, உடலில் விஷம் கலந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனினும் உடலில் கலந்த விஷம் என்னவென்பது தொடர்பில் அறியாததன் காரணமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே இதன் காரணமாக அவர்கள் உயிரிழப்பதாக விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.