நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் இருவர் மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (18) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (19) கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்