தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில், மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டதாக குறித்த 13 இந்திய மீனவர்களும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.