அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு

கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவீன அதிகரிப்பில், அரிசி விலையும் தாக்கம் செலுத்தியுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகளில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயின் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ள போதிலும், அதனை கொள்வனவு செய்த நுகர்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.