கொரோனா தொற்றின் எதிரொலி -இரண்டு பிரதேசங்களுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

கொரோனா தொற்றின் எதிரொலி -இரண்டு பிரதேசங்களுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

இராஜாங்கனை மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த பிரதேசங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவானதை அடுத்து இந்த பிரதேசங்களுக்கான பயணக்கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு வாக்காளர் அறிவிப்பு ஆவணத்தை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானிக்கவில்லை என்றும், எதிர்வரும் தினங்களில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைவாக உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.