50 நாட்களுக்கு பூட்டு; யாழ்ப்பாணத்தில் முண்டியடித்த பொதுமக்கள்!

50 நாட்களுக்கு பூட்டு; யாழ்ப்பாணத்தில் முண்டியடித்த பொதுமக்கள்!

சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்தனர்.

சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் 50 நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த தகவல் வெளியானது முதல் யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தமையை நேற்று காண முடிந்தது.

இந்நிலையில் வாகனத் தாங்கிகளில் எரிபொருளை நிரப்பியமைக்கு மேலதிகமாக போத்தல்களிலும் எரிபொருளை மக்கள் கொள் வனவு செய்தமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே நிலை மையே காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் , நேற்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.