மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கும் யாழ் – கொழும்பு ரயில் சேவை!

மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கும் யாழ் – கொழும்பு ரயில் சேவை!

வடக்கிற்கான ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக அண்மைய நாட்களில் நீண்டதூர ரயில் சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு நீண்ட தூர ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ஆரம்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ – காங்கேசன்துறைக்கான இரண்டு அதிவேக ரயில்கள், கோட்டே – காங்கேசன்துறைக்கான இரண்டு இன்டர்சிட்டி ரயில்கள் மற்றும் இரண்டு யாழ்தேவி ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.