ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.