CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.

டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நடை​பெற்​றது.

 

நீர் இருப்பு 

இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.

CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு | Cwma Upholds Cauvery Water Release To Tamil Nadu

கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை உடனடி​யாக திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என தமிழக அரசின் தரப்​பில் வலியுறுத்தப்பட்​டது.

இதன்போது, கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களில் 50% அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளது.

பெங்​களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பில் உள்​ளது. எனவே தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்​து​விட இயலாது என கர்​நாடக அரசின் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

 

தமிழகத்​துக்கு நீர்

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும்.

CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு | Cwma Upholds Cauvery Water Release To Tamil Nadu

கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும்.

இதனை ஜூலை 29-ம் திகதி காலை 8 மணி முதல் இருமாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமிழகத்​துக்கு நீர் செல்​வதை உறுதி செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டது.

எனினும் அவசர ஆலோசனையில் பின், மழை பெய்​யாத​தால் குடிநீருக்கே தட்​டுப்​பாடு ஏற்பட்​டுள்​ளது. இந்த சூழலில் தமிழ்​நாட்​டுக்கு நீரை திறந்​து​விட இயலாது. காவிரி நீர் ஒழுங்​காற்று குழு​வின் உத்​தரவை எதிர்த்து கா​விரி மேலாண்மை ஆணை​யத்​தில்​ முறை​யிட உள்ளோம் என நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி தெரிவித்துள்ளார்.