தொடர்ந்தும் 4 ஆவது நாளாகவும் 90ஐ கடந்தது கொவிட் மரணங்கள்

தொடர்ந்தும் 4 ஆவது நாளாகவும் 90ஐ கடந்தது கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளது.