போலி காசோலை மோசடி - மேலும் ஒருவர் கைது

போலி காசோலை மோசடி - மேலும் ஒருவர் கைது

இரும்பு தொழிற்சாலை ஒன்றின் பெயரில் போலியான காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்த சம்பவம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளனர்.