நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில், நாளைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.