கொழும்பிலிருந்து மரக்கறிகளை கொண்டு செல்லும் போர்வையில் ஹெரோயின் கடத்திய இருவர் கைது!

கொழும்பிலிருந்து மரக்கறிகளை கொண்டு செல்லும் போர்வையில் ஹெரோயின் கடத்திய இருவர் கைது!

கொழும்பிலிருந்து மரக்கறிகளை கொண்டு செல்லும் போர்வையில், ஹெரோயினை கொண்டு சென்ற இரண்டு பேர், மெதிரிகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெதிரிகிரிய பகுதியில், கெப் ரக வாகனம் ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 3 கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்வதற்காக, அத்தியாவசிய சேவை அனுமதிப் பத்திரத்தை அவர்கள் பயன்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.