நாட்டின் பலப்பகுதிகளில் நாளை மழை பெய்யும்

நாட்டின் பலப்பகுதிகளில் நாளை மழை பெய்யும்

நாட்டின் பலப்பகுதிகளில் நாளை(27) மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஓரளவு மழை பெய்யக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.