உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 38 கோப்புகள் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 38 கோப்புகள் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 38 கோப்புக்களை சட்டமா அதிபர் ஊடாக பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த கோப்புக்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுடமான நிசாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.