யாழில் தலைமறைவாகி இருந்த 4 இந்தியர்கள் கண்டுபிடிப்பு

யாழில் தலைமறைவாகி இருந்த 4 இந்தியர்கள் கண்டுபிடிப்பு

இந்தியாவில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்த மற்றுமொரு குடும்பம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

34 வயதுடைய பெண் ஒருவர் அவரின் 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் குறித்த பெண்ணின் 61 வயதுடைய தாய் ஆகியோரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள், படகு ஊடாக மன்னார் பகுதிக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் இன்று (13) பி.சி.ஆர் பரிசோனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.