யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-07-2026) இடம்பெற்றுள்ளது.

இதன்போது புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

தனியார் பேருந்து

இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றைய தினம் குறித்த தனியார் பேருந்து புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.

யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி | Jaffna Bus Driver Dies While Driving

அந்த பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ள நிலையில் பேருந்தானது வேலணை - அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.

இதன்போது பேருந்து அவ்வாறே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மரண விசாரணை

பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.

 

யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி | Jaffna Bus Driver Dies While Driving

இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.