AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்

செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ரீதியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

AI பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தரவு சேமிப்பகங்களின் (server) பயன்பாட்டிற்கும் பாதுகாப்பு தேவைக்கும் அதிகளவு நீர் உள்வாங்கப்படுவதால் இந்த எதிர்ப்பை சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. 

இதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் 2030-க்குள் AI தொடர்பான கட்டமைப்புகள் ஆண்டுதோறும் 9.3 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் நீர்வளமும்

அந்த வெப்பத்தைத் தணிக்க, பல டேட்டா சென்டர்கள் தண்ணீரை ஆவியாக்கும் குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன என்றும்  அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன. 

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம் | Growth Ai And Global Water Scarcity New Challenge

இது 100 கோடிக்கும் அதிகமான மக்களின் ஒரு வருட குடிநீர் தேவைக்கு சமமான அளவவாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட புதிய AI தரவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது அதற்கு முந்தைய 3 ஆண்டு காலத்தை விட 70% அதிகமாகும். அந்தவகையில் ஒரு நடுத்தர தரவு மையம் ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வெளியாகிய ஆய்வு அறிக்கை

பெரிய தரவு மையங்களுக்கு ஒரு நாளுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான லீட்டர் தண்ணீர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 50,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் தினசரி நீர் தேவைக்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம் | Growth Ai And Global Water Scarcity New Challenge

இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் இலாப நோக்கமற்ற முக்கிய அமைப்பொன்றின் அறிக்கை பின்வருமாறு தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளது. அதாவது உள்ளுர் மக்கள் எப்போதும் கிணற்று நீரை நம்பி இருப்பார்கள்.

இந்த நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவால் பல மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குயை ஏற்படுத்தும்.

இந்த நிலமை சர்வதேச ரீதியில் வெப்பமாதலை தலைத்தோங்க செய்யும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சில குடியிருப்பாளர்கள் கிணற்று நீர் வற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து 2030-க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கை விவரித்துள்ளது.

எனினும் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆய்வின்படி திட்டம் நீர் விநியோகத்தை பாதிக்கவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.