வடக்கில் 43 பேருக்கு கொரோனா

வடக்கில் 43 பேருக்கு கொரோனா

வட மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு நேற்று (04) கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று 824 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் 43 பேருக்கு தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 37 பேரும் அடங்குவதாக கோரிக்கை விடுத்துள்ளார்.