
வடக்கில் 7 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 நேற்று (02) தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்று 478 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கு தொற்றுறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.