யாழில் தொடரும் துப்பாக்கிச் சூடு! தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்

யாழில் தொடரும் துப்பாக்கிச் சூடு! தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் குறிவைத்து இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் கொடிகாமம் பாலாவி காட்டுப் பகுதியில் மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாலாவிப் பகுதியில் சுற்றுக் காவலில் ஈடுபட்ட இராணுவத்தினர், அவ் வழியே மணலுடன் வந்த உழவு இயத்திரத்தை மறித்துள்ளதாகவும் அவர்கள் இராணுவத்தினரை மோதித் தள்ள முற்பட்ட போது உழவு இயந்திரத்தின் சக்கரங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் மூன்று சக்கரங்கள் காற்றுப் போன நிலையில் அதில் பயணித்த மூவரும் உழவு இயந்திரத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்தல்காரர்களினால் கைவிட்டுச் சென்ற உழவு இயந்திரத்தை கொடிகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, கடத்தல் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

Gallery Gallery