பாடசாலை வருகையில் ஆர்வம் காட்டிய மேல் மாகாண மாணவர்கள்

பாடசாலை வருகையில் ஆர்வம் காட்டிய மேல் மாகாண மாணவர்கள்

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் மீள ஆரம்பமாகின.

ஆயினும் பாட விதானங்கள் தொடர்பில் உரிய தெளிவூட்டல்கள் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண அளவு மாணவர்களின் வருகையே இன்று பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதற்கமைய 15 மாணவர்களை கொண்ட தரங்களில், சகல நாட்களும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

16 முதல் 30 மாணவர்கள் உள்ள தரங்களை, இரண்டாக பிரித்து வாராந்தம் ஒரு பிரிவினர் என்ற அடிப்படையில், கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

30 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட தரங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவதோடு, சமனான நாட்கள் அளவில், அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது