சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்ள சகல தர மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முகக்கவசங்கள் அணியாமல் வாகனங்களில் பயணிப்பதற்கு இடமளிக்க கூடாது.

இந்த விடயம் தொடர்பில் சகல காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருந்தால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதி, நடத்துனர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்