
நாட்டில் வாகன பதிவுகள் ஜனவரியை விடவும் பெப்ரவரியில் உயர்வு
நாட்டில் வாகன பதிவுகள், கடந்த ஜனவரி மாதத்தினை விடவும், பெப்ரவரி மாதத்தில் சிறியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 3 ஆயிரத்து 256 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பெப்பிரவரி மாதத்தில் 3 ஆயிரத்து 558 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு, தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களை பதிவு செய்வதில், கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தினை விடவும், இந்த வருடத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருட பெப்ரவரி மாதத்தில் 31 ஆயிரத்து 402 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது