வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சிற்றூர்ந்து! இரண்டு பெண்கள் பலி
கெகிராவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 02 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்,15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026