தலைமன்னார் பிரதான வீதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு

தலைமன்னார் பிரதான வீதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின், கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில், சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான தகவல்கள், இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.