ரஞ்சன் ராமாநாயக்கவின் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

ரஞ்சன் ராமாநாயக்கவின் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

ரஞ்சன் ராமநாயக்கவின் தண்டனையை மீள்பரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கான தீர்ப்பினை மீள்பரிசிலனை செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றின் எமது செய்தியாளர் தெரிவித்தார்