கங்கைக்குள் விழுந்த கைப்பேசியால் முதலையிடம் சிக்கி காணாமல் போன காவற்துறை அதிகாரி
நில்வலா கங்கையில் விழுந்த காவல்துறை அதிகாரி ஒருவரை முதலையொன்று கொண்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு காவல்துறை அதிகாரி நாதுகல பகுதியில் வைத்தே இவ்வாறு முதலையிடம் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவல்துறை அதிகாரியின் கையடக்க தொலைபேசி கங்கையில் விழுந்ததை தொடர்ந்து அதை அவர் எடுப்பதற்காக முயற்சித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் திடீரென தவறி கங்கைக்குள் விழுந்த காவற்துறை அதிகாரியை முதலையொன்று இழுத்துச் சென்றதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரியின் சடலத்தை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026