நாட்டில் மேலும் 321 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 321 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 நோயிலிருந்து மேலும் 321 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 411 ஆக குறைவடைந்துள்ளது