கொரோனா தொற்றுக்கு புதிதாக 25 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு புதிதாக 25 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புதிதாக இன்று (திங்கட்கிழமை) மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துமனையில் 5 பேர், கே. எம்.சியில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தை பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.