"Too late" ; போர் நிறுத்தத்திற்கு அழைத்த ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பதில்

"Too late" ; போர் நிறுத்தத்திற்கு அழைத்த ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பதில்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது.

அத்துடன் சவுதி அரேபியா,  பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

"Too late" ; போர் நிறுத்தத்திற்கு அழைத்த ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பதில் | Trump S Response To Iran Urging Ceasefireநான்கு நாள் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளங்கள், கடற்படை ஆகியவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஈரான் அதை ஏற்கவில்லை.

இதற்கிடையே ஈரான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில் "ஈரான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை, தலைமை அனைத்தையும் இழந்துவிட்டது. இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு காலம் கடந்துவிட்டது என்றேன்" என்றார்.