கெசெல்கமுவ ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு...!

கெசெல்கமுவ ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு...!

நோர்வூட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெசெல்கமுவ ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளால் காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் படி காவல்துறையினர் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பல நாட்களாக ஆற்றில் இருந்த காரணத்தினால் சடலம் அழுகிபோய் உள்ளதால் குறித்த நபர் யாரென அடையாளம் காண முடியாமல் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.