உடுவில் கோட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்டப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருதனார்மடம் கொரோனா தொற்றுக் கொத்தணியின் முதலாவது நபரின் மகளுக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024