
மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
மே மாத மின்சாரப் பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு வழங்கப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிக்கப்பட்டிருந்தமையினால் பாவனையாளர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக விசனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இம் மாதம் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் வழங்கவுள்ளது. இதனடிப்படையில், இம்மாதம் வழங்கப்படும் மின் பட்டியலில் கட்டணக் கழிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.