கொரோனா நோயாளியால் மூடப்பட்டது காலி மீன்பிடித்துறைமுகம்
கொரோனா தொற்றுக்குள்ளானவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலி மீன்பிடித் துறைமுகம் இன்றைய தினத்திலிருந்து மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளியே மீன்பிடித்துறைமுகத்துக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே குறித்த துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.