பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயமானது என என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கட்டாயம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கமைய முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.