ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.