யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான பொருள்! குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை

யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான பொருள்! குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிபொருள் உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் மர்ம பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து அல்லது பொருள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.