வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தீர்மானம்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தீர்மானம்!

ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்திப் பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், பணிகள் நிறைவடையாதிருக்கும் வீதிகளை கண்டறிந்து அவற்றை தாம் பொறுப்பேற்று, பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வீதிகள் காணப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை  சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, A மற்றும் B பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகள்,  கிராம மற்றும் தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளிலும் இவ்வாறு  அபிவிருத்தி  செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உரிய முறையில் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யாத ஒப்பந்தக்காரர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அமைச்சரிடம் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.