நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தீவிரம்

நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தீவிரம்

நீர்கொழும்பு  செத்தபாடு  கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

7 இளைஞர்கள் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் நீராட சென்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் ஈடுப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.