மகனின் கொடூர தாக்குதலால் பலியான தந்தை! யாழில் துயரம்
யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை வேளை அவரது மகன் மேற்கொண்ட கொடூர தாக்குதலுக்கு இலக்காகியே அவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026