யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கிவருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்

கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதன் பிற்பாடு கடந்த ஒன்பது மாதங்களாக குறித்த பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அதிபர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்குமாறு வடக்குமாகாண ஆளுநரை சந்தித்து தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் புதிய அதிபர் இதுவரை நியமிக்கப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை | Jaffna School Operating Without A Principal

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி சிரமப்படும் தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு விரைவாக புதிய அதிபரை அதிகாரிகள் நியமிக்கும்படி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.