தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 524 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 524 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 524 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 47 ஆயிரத்து 542 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்.

அத்தோடு 79 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தொடர்ந்தும் 7 ஆயிரத்து 37 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக குறித்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.