
சட்டவிரோதமாக ஸ்ரீலங்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டசுமார் 300 அதிசொகுசு வாகனங்கள்
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த அதிசொகுசு வாகனங்கள் அரசுடைமை ஆக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்தது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு வசதியின் கீழ் இவ்வாறான சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாட்டின் சட்ட நிலைமை கருத்திற்கொண்டு குறித்த வாகனங்கள் அரசுடைமை ஆக்கப்படும் எனவும் ஜெயரத்ன கூறினார்.