மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடலோர பகுதிகளிலும் ஆழ்கடல் பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இடைக்கிடையே கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கடற்றொழிலில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026