பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது சிக்கிய சந்தேக நபர்!

பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது சிக்கிய சந்தேக நபர்!

ரிபீடர் ரக துப்பாக்கி மற்றும் அதற்கு உபயோகப்படுத்தும் 5 ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மீரிகம நாராதெணிய தங்ஓவிட பிரதேசத்தில் வைத்தே துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 70 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.