ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது!

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 98ஆயிரத்து 363பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், ஒன்பதாயிரத்து 596பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 29ஆயிரத்து 267பேர் வைரஸ் தொற்றுக்காக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 373பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 59ஆயிரத்து 500பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.