கங்கைகளை பாதுகாக்கவுள்ள ஜனாதிபதி செயலணி

கங்கைகளை பாதுகாக்கவுள்ள ஜனாதிபதி செயலணி

நாட்டின் கங்கைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிக்கவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 5 பொருட்களை அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தடை செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்;று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைச்சால் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.